Press "Enter" to skip to content

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நயன்தாரா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை திரையரங்கத்தில் பார்க்க வந்த நயன்தாராவை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் கடந்த 28-ம் தேதி வெளியான திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் கீழ் மகன் (ரவுடி) பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

முக்கோண காதல் கதையை கொண்ட இந்த படத்தில், கதிஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கத்திற்கு விசிட் அடித்துள்ளனர். இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய்சேதுபதி ஆகியோர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, படத்தின் வெற்றியைஇனிப்புக்கட்டி (கேக்) வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டு பரவி வருகிறது. தியேட்டருக்குள் நயன்தாரா வரும் போது அவரை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »