Press "Enter" to skip to content

விரைவில் மங்காத்தா-2.. அறிவித்த வெங்கட்பிரபு

மங்காத்தா 2-ம் பாகம் விரைவில் உருவாகும் என்று இயக்குனர் வெங்கட்பிரபு அறிவித்துள்ளது சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினியின் எந்திரன் 2-ம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி ஆகிய படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம், சுந்தர்.சி-யின் அரண்மனை 3 பாகங்கள் வந்தன. கமலின் இந்தியன் 2-ம் பாகம் தற்போது தயாராகிறது.

மங்காத்தா –  வெங்கட்பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா நடித்து 2011-ல் வெளியான மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று வலைத்தளத்தில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மங்காத்தா 2-ம் பாகம் விரைவில் உருவாகும் என்று வெங்கட்பிரபு அறிவித்து உள்ளார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதை சிறப்பாக வந்துள்ளது என்றும், மங்காத்தா 2 கதையை அஜித்திடம் தெரிவித்து விட்டேன் என்றும் கூறி உள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »