தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ஒன்றில நடித்து பிரபலமான நடிகையை இயக்குனர் ஒருவர் மோசமாக நடத்தியது குறித்து கூறியுள்ளார்.
நடிகை நிக்கி டம்போலி தமிழில் காஞ்சனா 3ம் பாகத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் வெளியான இருட்டறையில் முரட்டு குத்து படத்தின் தெலுங்கு மறுதயாரிப்புகில் நடித்து அங்கும் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்திருக்கிறார். தற்போது மீண்டும் தமிழ் திரைப்படம் பக்கம் வந்திருக்கும் நிக்கி டம்போலி சமீபத்தில் கொடுத்த பேட்டியில் அவருக்கு நடந்த சம்பவத்தி குறித்து பேசியிருக்கிறார்.
நிக்கி டம்போலி
அவர் கூறியிருப்பதாவது, தென்னிந்திய திரைப்படத்தைச் சேர்ந்த ஒரு இயக்குனர் என்னை மோசமாக நடத்தினார். உடல் ரீதியாக இல்லாமல் வெளிநாட்டில் நான் நடனம் ஆடச்சென்றபோது என்னை அவமதித்து மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதால் நான் அழுதே விட்டேன். அவர் யார் என்பதை சொல்ல மாட்டேன். இப்போதும் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதைப் பார்த்து ரசிகர்கள் யார் அந்த இயக்குனர் என்று ஒவ்வொரு பெயராக இணையத்தில் கேட்டு வருகிறார்கள்.
[embedded content]
Source: Malai Malar