Press "Enter" to skip to content

பொன்னியின் செல்வன் பட நடிகரை இயக்கும் அருண்ராஜா காமராஜ்

கனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ், அடுத்ததாக பொன்னியின் செல்வன் பட நடிகரை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் மறுதயாரிப்பு ஆனது. அதன்பின்னர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ஆர்ட்டிகிள் 15 என்கிற இந்தி படத்தின் மறுதயாரிப்புகான நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கிருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

கார்த்தி – அருண்ராஜா காமராஜ்

இந்நிலையில், அருண்ராஜா காமராஜ் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் மேலும் இப்படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி தற்போது முத்தையா இயக்கும் விருமன் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »