Press "Enter" to skip to content

ஆளுநர் தமிழ்நாடு சர்ச்சை – ஆளுநர் மாளிகை விளக்க அறிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் சென்னை மெட்ரோ இதொடர் வண்டிகளில் 2.66 லட்சம் பேர் பயணம்.

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 13 ஆம் தேதி அன்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 66 ஆயிரத்து 464 பேர் சென்னை மெட்ரோ தொடர் வண்டியில் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னை சென்ட்ரல் பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நிலையத்தில் 2,21,731 பயணிகளும் கிண்டி பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நிலையத்தில் 14,649 பயணிகளும் திருமங்கலம் பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நிலையத்தில் 13,607 பயணிகளும் விமான நிலையம் மெட்ரோ நிலையத்தில் 12,099 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

அதேபோல் 14ஆம் தேதி அன்று 1,62,525 பயணிகளும் 15ஆம் தேதி 1,08,160 பயணிகளும் 16 ஆம் தேதி 1,34,167 பயணிகளும் 17 ஆம் தேதி 1,65,399 பயணிகளும் மெட்ரோ இரயிலில் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  தரம் உயர்த்தப்படுமா….. அழுத்தம் கொடுக்கும் மின்சார துறை……

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »