Press "Enter" to skip to content

EXCLUSIVE: டெல்லியில் உணரப்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…சமூக வலைதளங்களில் மிகுதியாகப் பகிரப்படும் காணொளிக்கள்!

டெல்லியில் இருந்து ஹைதராபாத் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

பயணி கைது:

ஸ்பைஸ்ஜெட் பாதுகாப்பு அதிகாரியின் புகாரின் பேரில், டெல்லி-ஹைதராபாத் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்த பெண் பணியாளர் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட பயணி அப்சர் ஆலமை டெல்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நடந்தது என்ன?:

தகவலின்படி, திங்களன்று ஸ்பைஸ்ஜெட்டின் SG-8133 டெல்லி-ஹைதராபாத் விமானத்தில் பயணி ஒருவர் கேபின் பணியாளர்களை துன்புறுத்தியுள்ளார்.  ஸ்பைஸ்ஜெட்டின் கூற்றுப்படி, ஸ்பைஸ்ஜெட்டின் விமானம் 23 ஜனவரி 2023 அன்று டெல்லியிலிருந்து ஹைதராபாத்திற்கு பறந்தது.  டெல்லியிலிருந்து விமானம் புறப்படும் போது ​​பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதையடுத்து அவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களில்…:

கடந்த சில மாதங்களாகவே விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் முறைகேடான சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன.  ஏர் இந்தியாவில் சிறுநீர் கழித்த சம்பவம் தவிர, டிசம்பர் 6, 2022 அன்று பாரிஸிலிருந்து புது டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் AI-142 இல் பயணிகளின் தவறான நடத்தை இரண்டு சம்பவங்கள் டிஜிசிஏ-ன் கவனத்திற்கு வந்துள்ளன. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  குடியரசு தினவிழா அணிவகுப்பு….அன்றுமுதல் இன்று வரை…..

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »