Press "Enter" to skip to content

தமிழ்நாடு மீது அக்கறை இல்லாத ஆளுநர்….. தேநீர் விருந்து புறக்கணிப்பு!!!

சென்னை வ.உ.சி சாலையில் நவீன முறையில் புதியதாக கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடத்தை  அமைச்சர் சேகர்பாபுவும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்….

இன்று சுமார் 1 கோடியே 89 லட்சத்தில் உருவாக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தையும் உடற்பயிற்சி கூடத்தையும் திறந்து வைத்துள்ளோம் இது இந்த பகுதி இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அதிமுகவினர் பாஜக அலுவலகத்தில் காத்துக்கிடக்கின்றனர் என்ற கேள்விக்கு…..

கொள்ளை வாசல் வழியாக பாஜக தமிழகத்தை ஆட்டி படைக்கலாம் என்று இருக்கிறார்கள்.  அவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு இங்கே நடந்து இருக்கின்ற சதுரங்க ஆட்டத்தில் முழுக்க முழுக்க பாஜகவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.  பாஜகவினர் முதலில் ஜெயலலிதா காலில் விழுந்து கொண்டு இருந்தனர் பிறகு தற்போது பாஜக காலில் அவர்கள் விழும் நிலைமை வந்துவிட்டது.

தற்போது கூட இந்த சதுரங்க ஆட்டத்தில் இரண்டாவது பெரிய கட்சி என்று சொல்லக்கூடிய  அதிமுக நோட்டாவிற்கு போட்டியிடுகின்ற பாஜக அலுவலகத்தில் காத்துக் கிடக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.  இதை வைத்து பார்த்துவிடலாம் அதிமுகவின் நிலைமை எந்த அளவிற்கு கீழே சென்றுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்” என்று விமர்சனம் செய்துள்ளார்.

திமுகவிலிருந்து ஒரு ஏக் நாத் சின்டே உருவாகுகிறாரா என்ற கேள்விக்கு…..

அதிமுகவின் ஏக் நாத் சிண்டேவாக சி.வி.சண்முகம் இருக்கிறாரா என்பதை பார்க்க வேண்டும் என்று அவர் சொல்ல அருகிலிருந்த அமைச்சர் சேகர்பாபு அவர் அந்த விஷயத்தை பகலில் சொன்னாரா? இரவில் சொன்னாரா என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு….

”பாஜகவினர் முதலில் ஜெயலலிதா காலில் விழுந்து கொண்டு இருந்தனர் பிறகு தற்போது பாஜக காலில் அதிமுகவினர் விழும் நிலைமை வந்துவிட்டது.  நோட்டாவிற்கு போட்டியிடுகின்ற பாஜக அலுவலகத்தில் காத்துக் கிடக்கின்ற நிலைமை அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.  இதை வைத்து கணக்கிடலாம் அதிமுகவின் நிலைமை எந்த அளவிற்கு கீழே சென்றுள்ளது என்பதை” என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  முதலமைச்சர் தலைமையில் நாடாளுமன்ற கூட்டம்…. பங்கேற்க அழைப்பு!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »