Press "Enter" to skip to content

குப்பைகளுக்கு தீ வைத்ததால் புகை மண்டலமாக மாறிய குடியிருப்பு…

ஈரோடு | கோபிசெட்டிபாளையம் வண்டிப்பேட்டை குமணன் வீதியை சேர்ந்தவர் நடராஜன் மனைவி கனகாம்பாள் (80 வயது). இவருடைய மகள் சாந்தி(60).

சாந்திக்கு திருமணமான பின்பு கணவர் மோகனசுந்தரம் மகன் சரவணக்குமார்(34) மகள் சசிரேகா என்ற மகளுடன் தாயார் வீட்டிலேயே இருந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகள் சசிரேகாவிற்கு திருமணமாகி காங்கேயத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்று விட்டார்.

மேலும் படிக்க | மாமா, மாமா மகன் சேர்ந்து 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்…

இந்த நிலையில் இன்று குமணன் வீதி பகுதியில் உள்ள அதிக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் கோபிசெட்டிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சாந்தியின் வீட்டின் முன்பு துர்நாற்றம் வீசியதால் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டினுள் சாந்தியின் அம்மா கனகாம்பாள் மற்றும் அவரது கணவர் மோகனசுந்தரம் ஆகிய இரண்டு பேரும் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இறந்து கிடந்த இருவரின் உடல்களை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க | கொட்டும் பார வண்டி மீதுஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) மோதி விபத்தில் தாய், குழந்தை பலி…

 

தொடர்ந்து காவல்துறையின் மேற்கொண்ட  விசாரணையில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாததால் வீட்டுக்குள்ளேயே  வைத்திருந்ததாக சாந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் கணவர் இறந்து 7 நாட்கள் மற்றும் அம்மா இருந்து இரண்டு நாட்கள் ஆனதாகவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை காவல்துறையினர் தங்கள் சொந்த செலவில் நல்லடக்கம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

அந்த பெண்ணின் உண்மை நிலை புரிந்து அவருக்கு உதவ முன்வந்த காவல் துறையினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

— பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | காதலர் தினம் கொண்டாட திருடனாக மாறிய கல்லூரி மாணவா்கள்…

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »