Press "Enter" to skip to content

பயணிகளிடம் பேரம் பேசிய காவல்துறையினர்….. நடவடிக்கை எடுத்த காவல்துறை!!!

தொடர் வண்டிபயணிகளை மிரட்டி பணம் பறித்ததாக, ஆய்வாளர் உள்பட நான்கு பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பேரம் பேசிய காவல்துறை:

ரயிலில் இரண்டு கோடி ரூபாய் ஹவாலா பணம் கொண்டு வந்த 4 பயணிகளின் விவரத்தை முறையாக விசாரித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லாமல்,  வருமான வரித்துறையில் ஒப்படைப்போம் என, பயணிகளிடம் பேரம் பேசி, காவல் துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படுவதாக, 
தொடர்வண்டித் துறை தனிப்பிரிவு குற்ற புலனாய்வு துறை ஆய்வாளர் முருகன் ( பொறுப்பு )  
பெரம்பூர் தொடர்வண்டித் துறை காவல் நிலையம், சப் ஆய்வாளர் குமார், காவலர்கள் தினேஷ், சுதாகர் ஆகியோர் செயல்படுவதாக, தொடர்வண்டித் துறை காவல்துறையின் டி ஐ ஜி க்கு தகவல் கிடைத்துள்ளது.

விசாரணை:

இதையடுத்து, தொடர்வண்டித் துறை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில், நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில், எவ்வித ஆவணமும் இல்லாமல் பெரம்பூர் தொடர் வண்டிநிலையம் வந்து இறங்கிய நான்கு பயணிகள் வைத்திருந்த 2 கோடி ரூபாயை பறிமுதல் செய்ததோடு, வருமான வரித்துறையில் ஒப்படைத்து விடுவோம் என மிரட்டி, பறிமுதல் செய்த பணத்தை மீண்டும் திருப்பி ஒப்படைக்க வேண்டுமானால், குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும் எனக்கூறி, பணத்தை பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பணியிடை நீக்கம்:

இதையடுத்து, தொடர்வண்டித் துறை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், ஆய்வாளர் முருகன் உள்பட நான்கு பேரையும்  தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதுடன், துறை ரீதியான விசாரணையும் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:     ”மத்திய அரசால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படும் தமிழ்நாடு…..”

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »