Press "Enter" to skip to content

திமுக ஆட்சியில் நிகழும் தொடர் வன்முறையை கண்டித்து போராட்டம்…அனுமதி கேட்டு பாஜக சார்பில் மனு!

தேர்தல் எதிர்நோக்கி  பல அறிவிப்புகள் 

மேகேதாட்டு அணைத் திட்டம், பெங்களூருவுக்கு குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கான திட்டமாகும். மேகேதாட்டு அணை கட்டுவதில் கர்நாடகா உறுதியாக இருக்கிறது. அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கவும், தயாராக இருக்கிறது என்று முதல்வர் பசவராஜ் தனது வரவு செலவுத் திட்டம் உரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

காவிரி நீர் மேலாண்மை

கடந்த 2022 ஜூன் 17 அன்று  காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16 ஆவது கூட்டம், ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தேர் தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான நிகழ்ச் 

சி நிரலில் மேகேதாட்டு அணை பிரச் 

சினை குறித்தும் விவாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.காவிரி நீர் மேலாண்மை ஆணையம், கர்நாடக அர 

சின் மேகேதாட்டு அணையின் திட்ட வரைவு அறிக்கை குறித்து கலந்தாய்வு செய்யப்படும் என்று அறிவித்தது.

தமிழ்நாடு அரடு கடும் கண்டனம் 

இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமின்றி, உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தது. அதில், “மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16 ஆவது கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதை ஏற்க முடியாது. இது விதி மீறலாகும். மேலும், காவிரி நீர் பங்கீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு எதிரானது. மேகேதாட்டு அணை குறித்து கூட்டத்தில் விவாதிப்பது, காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரம்பை மீறிய நடவடிக்கையாக அமையும்” என்று சுட்டிக்காட்டியிருந்தது.தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு குறித்து,  கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கடும் விமர்சனம் செய்திருந்தார்.

மேலும் படிக்க | சென்னை ஐஐடி-யில் புதிய ஆராய்ச் 

சி மையத்தை தொடங்கியது அமெரிக்க நிறுவனம்

தமிழ்நாடு அரசு அதிகார வரம்பு இல்லை 

“காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகேதாட்டு அணை வரைவு அறிக்கை தொடர்பாக ஆலோ 

சிக்க தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்தது. இதுபோன்று தமிழக அரசு பல்வேறு மனுக்களை தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசுக்கு எந்த அதிகார வரம்பும் இல்லை. எந்தவிதமான அணைகள் கட்டவும், நீர்ப்பாசன திட்டங்களுக்கு அனுமதி வழங்கவும் இந்த ஆணையத்திற்கு,  தனி அதிகாரம் உள்ளது” என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.

பாலைவனமாக மாறிவிடும்

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பணி என்பது, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, காவிரியில் தமிழ்நாட்டுக்கு 177.25 டி.எம். 

சி. தண்ணீர் கர்நாடகம் திறந்துவிடப்படுவதை உறுதி செய்வது மட்டும்தான். அதற்குக்கூட அதிகாரம் ஏதுமற்ற அமைப்பாகத்தான் மேலாண்மை ஆணையம் இருக்கிறது.காவிரியில் நீரைத் தடுத்து, மேகேதாட்டுவில் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 67.14 டி.எம். 

சி. நீர் கொள்ளளவு கொண்ட அணையைக் கட்டவும், 400 மெகாவாட் நீர் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கவும் கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இதை அனுமதித்தால் தமிழ்நாட்டின் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும்.

மேலும் படிக்க | குடிசை இல்லாதப் பகுதிகளை உருவாக்குவதே எங்களின் குறிக்கோள் – முதலமைச்சர் பேச்சு!

கடந்த 48 ஆண்டுகளில் 15.87 இலட்சம் ஹெட்டேர் நிலம் சாகுபடி பரப்பை நாம் இழந்துள்ளோம். ஆனால் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 9.96 இலட்சம் ஹெக்டேரிலிருந்து 38.25 இலட்சம் ஹெக்டேராக அதிகரித்துவிட்டது.தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைப் பறித்து வரும் கர்நாடகா, மீண்டும் மேகேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என்று முனைந்திருப்பதும், ஆளும் பா.ஜ.க. அரசு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டு இருப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

கர்நாடகம், நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறுவதை அனுமதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »