Press "Enter" to skip to content

பிரேக் அடித்த ஆம்னி பேருந்து…நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து…!

தனது வீட்டிற்கு செல்லும் வழியில், ஒரு வழக்கறிஞரை வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக இருவர் கைதாகியுள்ளனர். இந்த சம்பவத்தின் கண்காணிப்பு தொலைக்காட்சி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து ஜோத்பூர் காவல்துறையைச் சேர்ந்த ஏ.டி.சி.பி நசீம் அலி, “இந்த மாதம் 18ம் தேதி, அதாவது நேற்று, மந்திர் வாலா மொஹல்லா பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் தனது வீட்டிற்கு செல்லும் வழியில், இருவரால் மறிக்கப்பட்டு ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார்:” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க | சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது…

அனில் முகேஷ் என அடையாளம் காணப்பட்ட குற்ற்வாளிகள், தங்களிடம் இருந்த கத்தி மற்றும் அரிவாளை வைத்து அந்த வழக்கறிஞரை சரமாறியாக தாக்கியுள்ளர்.

இதனால் சாலையில் சரிந்த வழக்கறிஞர் மயக்க நிலை அடைந்ததாகத் தெரிகிறது. பின், அவர் மீது இருவரும் நடத்திய தொடர் தாக்குதலால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் படிக்க | தேர்தலில் மதுபானம்…..ஊடுருவலை தடுக்க பெண்கள் அமைத்த செக் போஸ்ட்!!!

இறந்த வழக்கறிஞர், ஜுக்ராஜ் சௌகான் (Jugraj Chauhan) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 48 வயதே ஆன இவரை ஏன் இவ்வளவு கொடூரமாக கொலை செய்தனர் என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜுக்ராஜ்-இன் உடலை உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

எதிர்பாராத நேரத்தில் தாக்கப்பட்ட வழக்கறிஞரின் தடுமாறும் கண்காணிப்பு தொலைக்காட்சி காட்சிகள் இணையத்தில் தற்போது படு மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

— பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ராணுவ வீரர் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய ராணுவ வீரர்கள்…

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »