Press "Enter" to skip to content

கோலாகலமாக நடைபெற்ற பெருமாள் திருக்கல்யாணம்…

சிவகங்கை | சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் குன்னத்தூர் ஓவிஎம் கார்டனில் சிவகங்கை மாவட்ட சேர்மன் பொன்.மணிபாஸ்கரன் அவர்களின் மகள் ஹரிப்பிரியா பி.ஆர்க். ஜெயக்குமார்.பீ.ஆர்க்  திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் 12ந்தேதி சென்னையில் நடைபெற்றது. 

தங்களது செல்லமகள் பிரமாண்ட திருமண விழாவை காண இயலாத தனது சொந்த கிராம மக்களுக்காக  குன்னாரம்பட்டியில்  திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார். தன் கிராம மக்கள் பிரமாண்ட கல்யாண கறி விருந்தில் பசியாறி மகிழ்ந்து செல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு சென்னை கல்யாணம் போல பிரமாண்ட பந்தல் கடந்த ஒரு மாதமாக தயார் செய்து வந்தனர். 

இன்று  திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஒன்றியம் முழுவதும் வீடு தவறாமல் வரவேற்பு பத்திரிக்கை கொடுக்கப்பட்டது. 

மேலும் படிக்க | இனி திருப்பதியில் லட்டு வழங்குவதில் புதிய உத்தரவு…முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்! 

கொரோனா காலத்தில் வீடு தவறாமல் செய்த உதவியால் அந்த பகுதி மக்கள் குன்னத்தூர் பெரிய கண்மாய் சாலையில் 504 கிடாய் பாத்திரம், குத்துவிளக்கு, பழம் என 350 தட்டுகளும் கண்ணுக்கு எட்டிய தூரம் சீர்வரிசை பொருட்களாக சுமந்து வந்து தாய் வீட்டு சீதனமாக கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இன்றைய திருமண வரவேற்பு விருந்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், சின்னையா, வைகைசெல்வன், கழக முன்னோடி நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர். இந்த பிரமாண்ட விருந்தில் வகை வகையான சென்னை பிரியானி, திண்டுக்கல் பிரயானி பிரபலங்களால்  ஏற்பாடு செய்யப்பட்ட பிரியானி வகைகள் தயார்  செய்ய்ப்பட்டு அனைவருக்கும் மனதார பரிமாரப்பட்டது. 

எஸ்.புதூர் ஒன்றியம் முழுவதிலும் இருந்து வந்த கிராம மக்களுக்கு காலை 10 மணிக்கு ஆரம்பித்த சுவையான பிரியாணியுடன் மனக்கும் கறி விருந்து மாலை வரை நடந்த பந்தியில்  சுமார் 20  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வயிறார பசியாறி சென்றனர் என்பது குறிப்பிடதக்கது. 

மேலும் படிக்க | அழகழகான நாய்கள் குவிந்த நாய்கள் கண்காட்சி… 

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »