Press "Enter" to skip to content

முடிவடைந்த சட்டமன்ற தேர்தல்… விலை உயர்த்தப்பட்ட சிலிண்டர்!!!

நாகலாந்தில் 4 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்தப்படவுள்ளதால் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.  இதில் திரிபுராவில் கடந்த 16-ந் தேதியும், மேகாலயா, நாகாலாந்துக்கு 27ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.  இந்த மூன்று மாநில தேர்தல் முடிவுகளும் 2ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

கருத்துகணிப்பு:

இந்த நிலையில், மூன்று மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.  அதில் இரண்டு மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

மறுவாக்குப்பதிவு:

தேர்தல் பொது பார்வையாளர்கள் அளித்த அறிக்கையின் படி, நாகாலாந்து சட்டசபை தொகுதிகளில் உள்ள நான்கு வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

 அதன்படி இன்று மறுவாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. 

இதையும் படிக்க:   இத்தாலி பிரதமர் தலைமையில் புவிசார் மாநாடு…!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »