Press "Enter" to skip to content

குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் – தேர்வாணையம் அறிவிப்பு!

மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை மக்களிடம் எடுத்துச் சென்று 2024 ல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம் என்று கன்னியாகுமாரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியுள்ளார். 

பொதுமக்களின் முதலீடுகளைக் கொண்ட எல் ஐ சி  மற்றும் எஸ்பிஐ நிறுவனங்களின் மூலம் அதிக அளவில் கடன் உதவி வழங்கி அதானியின் வர்த்தக மோசடிக்கு துணை போன மத்திய பா ஜ க அரசை கண்டித்து நாடு முழுவதும் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே எஸ் அழகிரியின் அறிவுறுத்தலின் பேரில், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக  சென்னை ராயப்பேட்டையில் மத்திய  அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் வசந்த் எம்.பி., மக்களுக்கு எதிரான மக்கள் விரோத ஆட்சியை மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது, இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்து செல்லும் பணியை தான் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து, விவசாயிகள் பிரச்சனை, சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை நாடு சந்தித்து வருகிறது, மக்கள் எவ்வளவு முறை கோரிக்கை வைத்தாலும் அதற்கு செவி சாய்க்காத மத்திய அரசு தனியார் நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதாக குற்றம் சாட்டினார். 

இதையும் படிக்க : செந்தில் முருகனை நீக்கிய ஓபிஎஸ்…ஈபிஎஸ் முன்பு அதிமுகவில் இணைவு!

தனியாரின் வாழ்வாதாரத்தை  முன்னேற்றுவதை  தவிர மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான எந்தவித நடவடிக்கையும் மத்திய பாஜக அரசு எடுக்கவில்லை என்றும், மக்களுக்கு மானிய விலையில் சலுகைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே  காங்கிரஸ் அரசு பொதுத் துறை நிறுவனங்களை கொண்டு வந்தது. ஆனால், அவற்றையெல்லாம் தற்போது தனியார் நிறுவனங்களாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது என்றும் குற்றும் சாட்டிய விஜய் வசந்த், இதையெல்லாம் கண்டித்து இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை மக்களிடம் எடுத்துச் சென்று 2024 – ல் ஆட்சி மாற்றத்தையும், மக்கள் ஆட்சியையும் கொண்டு வருவோம் என்று கூறினார்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »