Press "Enter" to skip to content

பாஜக அல்லாத ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வார்கள்…. அப்படி இல்லை என்றால்…!!!

சட்டமன்ற கூட்டத்தில் மீண்டும் கணினிமய ரம்மி குறித்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் அவர் கையெழுத்து போடுவது தான் சட்ட விதி என ஜி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நினைவு தினம்:

மாமேதை காரல் மார்க்சின் நினைவு தினத்தை ஒட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் காரல் மார்க்ஸ் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

கார்ல் மார்க்ஸ்:

1883 ஆம் ஆண்டு மார்க்ஸ் லண்டனில் இறந்த போது அவருடன் பயணித்த ஏங்கல்ஸ், மார்க்ஸ் இறந்த பிறகு அவரின் பங்களிப்பு குறித்து இந்த உலகம் உணரும், என்றும் உலக அளவில் முதலாளித்துவம் எப்படி இயங்குகிறது, சுரண்டல் எப்படி ஏற்படுகிறது, உபரி மதிப்பு உருவாவது குறித்தும் எழுதியவர் மார்க்ஸ் என்று பாராட்டி பேசினார்.

மேலும் அவர் ஜெர்மன் என்ற குடியுரிமையை கைவிட்டார் எனவும் நாடற்றவராக லண்டன் சென்றவர் அங்கு இறந்தார் எனவும் ஆனால் இன்று உலகமே அவரை கொண்டாடுகிறது எனவும் தெரிவித்தார்.

இடதுசாரி:

லத்தின் அமெரிக்க நாடுகளில் கியூபாவில் மட்டும் தான் இடதுசாரி கம்யூனிஸ்ட் ஆட்சி இருந்தது எனவும் இப்போது பிரேசில் பொலிவியா உள்ளிட்ட நாடுகளிலும் கம்யூனிசம் உள்ளது எனவும் கூறினார்.  மேலும் இந்தியாவில் பாஜகவுக்கும், ஆர் எஸ் எஸ் க்கும் மாற்றாக இடதுசாரி இயக்கம் சரியான கொள்கையை முன் வைக்கிறது எனவும் அது குறித்து அச்சப்படுவதால் தான் அமித்சா அப்படி சொல்கிறார் எனவும் தெரிவித்தார்.

கணினிமய:

கணினிமய ரம்மி தொடர்பாக, மாநில அரசின் அவசர சட்டத்தில் ஆளுநர் கையெழுத்து போட்டார் எனவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 44 பேர் தற்கொலை செய்து கொண்டனர் எனவும் தெரிவித்த அவர் ஆளுநர் அந்த குடும்ப உறுப்பினர்களை விசாரிப்பதற்கு பதில் அந்த ரம்மியை நடத்துபவர்களை அழைத்து பேசுகிறார் எனவும் இது மனிதாபிமானத்திற்கு விரோதமானது எனவும் பேசினார்.

பாஜக திட்டம்:

மத்திய அரசாங்கத்தை பொறுத்த வரையில் பாஜக அல்லாத ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வார்கள் எனவும் அப்படி இல்லை என்றால் ஆளுநரை வைத்து ஆட்சியை சீர்குலைக்க முயற்சி செய்வார்கள் எனவும் கூறினார்.

இதையும் படிக்க:   சட்ட விரோதமாக மணல் கொள்ளை… தமிழக அரசு விளக்கம்!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »