சென்னை மெட்ரோ இ தொடர் வண்டிதிட்டம் கட்டம் 2-ல் வழித்தடம்-4-ல் பூந்தமல்லியில் அமைக்கப்பட்டு வரும் பணிமனைக்கு ரூ 31 கோடியே 80 இலட்சம் மதிப்பில் இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஒப்பந்தம்:
இந்த ஒப்பந்தம் ஸ்வஸ்திக் எக்விப்லவாக்கி நிறுவனத்திற்கு ரூ 31.80 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ இ தொடர் வண்டிநிறுவனததின் இயக்குனர் ராஜேஷ சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) முன்னிலையில் சென்னை மெட்ரோ இ தொடர் வண்டிநிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டி) மற்றும் ஸ்வஸ்திக் – எக்விபலவாக்கி நிறுவனத்தின் திட்ட தலைவர் ஷோபித் சக்சேனா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
நோக்கம்:
வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், நிறுவுதல், சோதனை செய்தல்,
பூந்தமல்லி பணிமனையில் இயந்திரங்கள் மற்றும் ஆலைகளை இயக்குதல் மற்றும் ஆயத்த தயாரிப்பு அடிப்படையில் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள 13 இயந்திரங்கள் மற்றும் இதர தளவாடங்கள் ஜூலை 2024 இல் பூந்தமல்லி பணிமனையில் சென்னை மெட்ரோ இ தொடர் வண்டிநிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டு தளத்தில் சோதனை செய்யப்படும்.
பணிகள்:
சென்னை மெட்ரோ இ தொடர் வண்டிதிட்டம் கட்டம் 2-ல் வழித்தடம்-4 கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழி சாலை வரை 25.1 கி.மீ. நீளமுள்ள உயர்மட்ட மற்றும் சுரங்கப்பதை மெட்ரோ இ தொடர் வண்டிநிலையங்கள் என மொத்தம் 27 மெட்ரோ இ தொடர் வண்டிநிலையங்கள் மற்றும் பூந்தமல்லியில் ஒரு பணிமனை என இந்த வழித்தடத்தில் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.
பங்கேற்றோர்:
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இ தொடர் வண்டிநிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளா எஸ்.
சதீஷ்பிரபு, துணை பொது மேலாளர் ஜெகதீஸ் பிரசாத். ஸ்வஸ்திக-எக்விப்லவாக்கி நிறுவனத்தின் துணை குழு தலைவர் பிரசாந்த் நாடேகா, பொது ஆலோசகரின் ரோலிங் ஸ்டாக் தலைவர் நந்தகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிக்க: பாஜக அல்லாத ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வார்கள்…. அப்படி இல்லை என்றால்…!!!
Source: Malai Malar