ஆர்ஆர்ஆர் படத்தை பிரதமர் மோடி தான் இயக்கினார் என மத்திய அரசு பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டாம் என மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடரின் 2ம் அமர்வில் ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க : ஆஸ்கர் விருது பெற்ற ‘நாட்டு நாட்டு…
‘ பாடல்…பெருமகிழ்ச்சி தெரிவித்த ராம் சரண்!
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இது தென்னிந்தியர்களுக்குக் கிடைத்த வெற்றி எனவும் அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்ட அவர், தாங்கள் தான் பாடலை எடுத்தோம், பாடலை எழுதினோம், பிரதமர் தான் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கினார் என ஆளுங்கட்சி பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டாம் எனவும் கூறினார். அப்போது, அவையே சிரிப்பலையில் மூழ்கியது.
Source: Malai Malar