Press "Enter" to skip to content

துப்பாக்கி சுடும் பயிற்சி செய்த சட்டக் கல்லூரி மாணவர் கைது…

பெரம்பூர் | சபாபதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முனிரத்தினம் 63 இவரது மனைவி அம்முலு. இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.அமுலு சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களாக ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். முனிரத்தினம் தான் இருக்கும் வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வருகிறார்.

கீழே தளத்தில் உள்ள மற்றொரு வீட்டில் முனிரத்தினத்தின் தங்கை தனலட்சுமி வசித்து வருகிறார். தனலட்சமியின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு அவர்கள் தனித்தனியாக வசித்து வருகின்றனர். முனிரத்தினம் இருப்பது அவர்களது பூர்வீக சொந்த வீடு.

மேலும் படிக்க | பேருந்து கவிழ்ந்து விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…

முனிரத்தனத்திற்கு இரண்டு தங்கைகள் உள்ளனர் அதில் ஒருவர் தனலட்சுமி கீழ்த்தரத்தில் வசித்து வருகிறார் மற்றொருவர் பாக்கியலட்சுமி இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார் இவரது கணவர் தாமோதரன்  மற்றும் தாமோதரனின் மகன் உதயகுமார் ஆகியோர் மேல் தளத்தில் வசித்து வருகின்றனர்.

தனலட்சுமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு முனிரத்தினத்திற்கு குழந்தைகள் இல்லை என்ற காரணத்தினால் அவருக்கு தெரியாமல் அவர் குடியிருக்கும் குறிப்பிட்ட அந்த வீட்டின் பாகத்தை தனலட்சுமி எழுதி வாங்கிவிட்டார் சிறிது காலம் கழித்து இந்த தகவல் முனிரத்தினத்திற்கும் மேல் தளத்தில் தனது பாகத்தில் வசித்து வரும் தாமோதரனுக்கும் தெரிய வந்தது.

மேலும் படிக்க | திருட முயன்ற போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு….!

இதனை யடுத்து முனிரத்தினம் தனது தங்கை தனலட்சுமிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இதனால் தனலட்சுமிக்கும் முனிரத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இன்று   அதிகாலை 3 மணி அளவில் முனிரத்தினம் அலறும் சத்தம் கேட்டுள்ளது அப்போது தாமோதரன் மற்றும் உதயகுமாரை  வந்து முயிரத்தினத்தின் வீட்டிற்குள்ளே சென்று பார்த்த போது முனிரத்தினம் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் இருந்துள்ளார்.

மேலும் படிக்க | லாரி விபத்து… குழந்தை உயிரிழந்த சம்பவம்!!!

உடனடியாக அவரை அரசு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி செய்துவிட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் சம்பவம் தொடர்பாக திரு வி க நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இரவு மூன்று மணி அளவில் முனிரத்தினத்தின் தங்கை தனலட்சுமி என்பவர் கல்லெண்ணெய் கொண்டு வந்து முனிரத்தினம் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியது தெரியவந்தது

இதனை அடுத்து தனலட்சுமியை கைது செய்த திருவிக நகர் காவல் துறையினர் தொடர்ந்து இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர் முணிரத்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் படிக்க | சென்னை பூக்கடையில் 50 இலட்சம் வழிப்பறி…!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »