Press "Enter" to skip to content

கியாஸ் சிலிண்டருக்கு கணினிமய மூலம் பணம் செலுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள்

வாடிக்கையாளர்கள் கியாஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துமாறு இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை :

இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இண்டேன் கியாஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதற்கான வழிமுறை, வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பிவைக்கப்படும். அந்த ‘லிங்க்’ ஒரு நாள் மட்டுமே திறந்திருக்கும். அந்த ஆன்லைன் முகவரியை ‘கிளிக்’ செய்து ‘கேஸ் மெமோ’வில் குறிப்பிடப்பட்ட தொகையை வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ-வாலெட் ஆகிய வழிமுறைகளில் பணத்தை செலுத்தலாம்.

சிலிண்டர் டெலிவரிக்கு பின் வாடிக்கையாளர்கள் எந்த விதமான கட்டணத்தையும் செலுத்த வேண்டாம். இந்த வழிமுறையை வாடிக்கையாளர்கள் கையாளாத பட்சத்தில், சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் பணியாளரிடம், டிஜிட்டல் மூலம் பணம் பெற வலியுறுத்தலாம். அதற்கான கருவியை கொண்டுவருமாறு கூறலாம். அந்த கருவியை கொண்டு நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ-வாலெட், பி.எச்.ஐ.எம்., யு.பி.ஐ., கூகுள் பே, பே.டி.எம். ஆகியவை மூலமாக பில் தொகை செலுத்தலாம். பணமாக செலுத்துவதை இறுதி வழியாக வைத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »