தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிப்ரவரி-5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளதை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாயில்களில் கூடுதலாக 4 மெட்டல் டிடெக்டர் கருவிகள் அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் உடைமைகள் பலத்த சோதனைக்கு பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறது.
Source: Dinakaran