டெல்லி: சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக டெல்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்தில் திமுக பங்கேற்றுள்ளது.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியிலும், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திலும் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
#WATCH Delhi: Opposition leaders including Congress Interim President Sonia Gandhi protest in front of Gandhi statue in Parliament premises, against #CAA_NRC_NPR #BudgetSession pic.twitter.com/wolQCzvz0Q
— ANI (@ANI)
இதில் திமுக எம்பிக்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்திய அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம், இந்தியாவை காப்போம், சிஏஏ, என்ஆர்சி வேண்டாம் என்ற பதாகைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்ற போதும் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் திமுக பங்கேற்காத நிலையில் தற்போது இரு தரப்பிடையே சுமூகம் உள்ளதால் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Source: OneIndia