கோவை: தமிழகத்தில் வனத்துறைக்கு சொந்தமான யானைகளுக்கான புத்துணர்வு முகாம் பிப்ரவரி 6ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 6ம் தேதி தொடங்கும் புத்துணர்வு முகாம் 48 நாட்கள் நடைபெறும் என்று வனத்துறை அமைச்சர் சீனிவாசன் அறிவித்துள்ளார். முதுமலை, தெப்பக்காடு, பொள்ளாச்சி டாப்ஸ்லிப், கோவை பாடிவயல் உள்ளிட்ட இடங்களில் புத்துணர்வு முகாம் நடைபெறும்.
Source: Dinakaran