Press "Enter" to skip to content

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புனரமைப்பு பணிக்கு ரூ.18.20 கோடி நிதிக்கு அரசு ஒப்புதல்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புனரமைப்பு பணிக்கு ரூ.18.20 கோடி நிதிக்கு அரசு ஒப்புதல் வழங்கியதாக தக்கார் அறிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 2018ம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் வீரவசுந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட வீரவசுந்தராயர் மண்டபத்தில் கல்சிற்பங்கள், கல்தூண்களை புனரமைக்க நாமக்கல் மாவட்டத்திலிருந்து கற்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புனரமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் தகவல் அளித்துள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »