காட்பாடி: காட்பாடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து குழந்தையுடன் பெண் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் எஸ்.ஐ ஆக பணியாற்றிய தனது கணவர் 2013-ல் காலமாகியும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை என புகார் அளித்துள்ளார். எஸ்.ஐ மனைவி அனிதா அளித்த புகார் மனுவை பெற்ற முதல்வர் உதவித்தொகைக்கு ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.
Source: Dinakaran