Press "Enter" to skip to content

ஒரு இடத்தில் நிற்காமல்.. சிரித்தபடியே.. எகிறி எகிறி குத்தி.. அடடா யாருப்பா அது.. அசத்திய ஜெயக்குமார்

சென்னை: நம்ம ஜெயக்குமார் இருக்காரே.. அமைச்சர் கண்ணில் எது பட்டாலும் சரி.. அதை ஒரு கை பார்த்துவிடுவார்.. சகலகலா வித்தகர்! ஒயிட் அண்ட் ஒயிட் வேட்டி சட்டையில்.. கையில் கிளவுஸ் மாட்டிக் கொண்டு பாக்ஸிங் செய்து கலக்கும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது!

பொதுவாக அமைச்சர் ஜெயக்குமார் சீரியஸ் & கலகலப்பு கலந்த மனிதர்.. வெகு இயல்பாக பழகுவார்.. எப்போதுமே கேஷூவல் பேச்சுதான்.. துளியும் கெத்து இருக்காது.. அதே சமயம் அரசியல் சம்பந்தமான விஷயங்கள் என்றால் சீரியஸ் ஆகிவிடுவார்.. ஆனால் புள்ளி விவரத்துடன் எடுத்து வைத்து பாயின்ட் பாயின்ட்டாக பேசுவார்!

இவர் எதையாவது வித்தியாசமாக செய்து கொண்டே கொண்டிருப்பார்.. கலைப்பிரியரும்கூட.. திடீரென்று பாடுவார், திடீரென்று கவிதை எழுதுவார், தடாலடியான ஒரு சிங்ககுட்டியை மடியில் தூக்கி வைத்து கொஞ்சுவார்.. இப்படித்தான் சென்ற வருடம் சென்னையில், உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஆளில்லா விமானம் எனப்படும் டிரோன் டாக்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

விமானம்

அதில் ஆர்வமுடன் ஏறி உட்கார்ந்து கொண்ட ஜெயக்குமார், அதன் கதவையும் சாத்தி கொண்டு… அந்த விமானத்தையே சுற்றுமுற்றும் பார்த்தார்.. பிறகு அந்த விமானம் தயாரிக்கப்பட்ட விதத்தை அங்கிருந்தோரிடம் கேட்டறிந்தார். அப்போதுதான் அது நடிகர் அஜீத் தயாரித்தது என்று தெரியவந்தது. உடனே அமைச்சர், “அஜீத் என்ன இவ்வளவு திறமைசாலியா இருக்கிறாரே” என்று ஆச்சரியப்பட்டார்.

ஜெயவர்தன்

இதேபோல, சில மாதங்களுக்கு முன்பு சென்னை சாந்தோமில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன ஜிம் ஒன்றினை ஜெயக்குமார் திறந்து வைத்தார். ரிப்பன் கட் பண்ணிட்டு உள்ளே நுழைந்தவர், ஜிம்மை சுற்றி ஒரு பார்வை பார்த்தார். பிறகு திடீரென அங்கிருந்த சைக்கிள் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு சைக்கிளிங் செய்ய ஆரம்பித்துவிட்டார். இதனை மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜன், ஜெயக்குமாரின் மகனும் முன்னாள் தென்சென்னை எம்பியுமான ஜெயவர்தன் சிரித்தவாறு ரசித்து கொண்டே பார்த்தனர். அப்போது அருகில் இருந்தவர்கள் ஜெயக்குமாரிடம் ஏதோ கேள்வி கேட்க, அதற்கு சைக்கிளிங் செய்து கொண்டே பதில் அளித்தார்.

பாக்ஸிங்

இப்படி பல அம்சங்களை அவ்வப்போது வெளியே தெறிக்கவிடுவார். அதுபோலதான், இப்போதும் ஒரு திறமையை வெளிப்படுத்தினார்… சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துச்சண்டை வீரர் ஒருவருடன் ஜெயக்குமார் பாக்சிங் செய்து அனைவரையும் அசத்தினார். தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த அமைச்சர், கைகளில் கிளவ்ஸ்களை கட்டிக் கொண்டு பாக்சிங்கில் இறங்கிவிட்டார்.

வீடியோ

வேட்டை, சட்டை & கையில் கிளவுஸ் என பார்க்கவே இந்த பாக்ஸிங் படுவித்தியாசமாக இருந்தது.. அநேகமாக சிரித்து கொண்டே பாக்ஸிங் செய்தது நம்ம அமைச்சராகத்தான் இருக்க முடியும்.. ஒரு இடத்தில் நிற்காமல், எதிரே போட்டிக்கு நின்ற குத்துச்சண்டை வீரரை ரவுண்டு கட்டி.. சுற்றி சுற்றி வந்து பாக்ஸிங் செய்தார்.. அந்த வீரரை எகிறி எகிறி குதித்து திணறடித்தார்.. அங்கிருந்தவர்கள் கரகோஷம் செய்து இதை உற்சாகப்படுத்தினர் இந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது!

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »