Press "Enter" to skip to content

மயிலாடுதுறையை அலற விடும் மர்ம நபரின் பேஸ்புக் கால்: ‘‘அண்ணன் வெளியில போயிட்டார், தனியாத்தானே இருக்கீங்க, துணையா வரட்டுமா..’’தனியாக இருக்கும் பெண்களுக்கு செக்ஸ் கொடுமை

மயிலாடுதுறை: நாகை மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகரமான மயிலாடுதுறையை அடுத்துள்ள கஞ்சாநகரம்  கிராமம் மற்றும் அருகில் உள்ள சில கிராமங்களில் கடந்த வீட்டில் தனியாக இருக்கும் குடும்ப பெண்களிடமும், கல்லூரி மாணவிகளிடமும் 3 மாதங்களாக மர்ம நபர் பேஸ்புக் மெசேஞ்சரில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வருவதாக கூறப்படுகிறது. செல்போனில் பெண்கள் குரல் கேட்டவுடன், அந்த மர்ம நபர் ‘‘அண்ணன் வெளியில போயிட்டார், தனியாத்தானே இருக்கீங்க, துணையா வரட்டுமா’’ என்று  பேச்சை போட்டுள்ளார்.  அதிர்ந்து போன பெண்கள், ‘‘நீ யார், எங்கே இருந்து பேசுகிறாய்’’ என கேட்டுள்ளனர்.

கடுப்பான அவர், ‘‘ரொமன்ஸ் பண்ணும்போது டென்ஷன் பண்ணாத..’’ என கூறி ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த  பெண்கள் செல்போன் இணைப்பை துண்டித்துள்ளனர்.இருப்பினும் விடாமல் சிறிது நேரத்தில் வேறு ஒரு எண்ணில் இருந்து அந்த மர்ம நபர் மீண்டும் அதே பெண்களை தொடர்பு கொண்டு, ‘‘போனை வைத்து  விட்டாலும் உன்னை விடமாட்டேன், விடுறமாதிரியா இருக்க..’’ என்று கூறி வர்ணித்துள்ளார். இதனால் கோபத்தி உச்சத்திற்கு சென்ற பெண்கள், அந்த நபரை  திட்டியதும் அவர் போன் இணைப்பை துண்டித்துள்ளார். இப்படியாக 10க்கும் மேற்பட்ட குடும்ப பெண்களுக்கும், மாணவிகளுக்கும் இதுபோன்ற டார்ச்சர் கொடுத்து  வருகிறார்.

 இதை அறிந்த ஒரு பெண்ணின் கணவர் தனது மனைவியின் செல்போனை தானே எடுத்து சென்றுள்ளார். வழக்கம்போல், அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட  மர்ம நபர், எதிர்முனையில் ஆண் குரல் கேட்டதும், ‘‘என்ன அண்ணே நீங்க போன எடுத்துட்டு வந்திட்டீங்களா, அண்ணிகிட்ட கொடுத்துட்டு போங்க, நாங்க  ஜாலியா பேசிக்குவோம்ல’’ என்று பேசி உள்ளான்.இதேபோல், கல்லூரி மாணவிகளிடமும் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சணை செய்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். இதுபற்றி இதுவரை பெண்கள் யாரும்  போலீசில் புகார் செய்யவில்லை. போலீசில் புகார் செய்தால் தங்களை போலீசசார் அழைப்பார்கள், அசிங்கமாக போகும் என பயந்து யாரும் போலீசுக்கு செல்ல  முன் வரவில்லை. இதனால் அந்த மர்ம நபர் தனது சேட்டையை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்.

பெண்களிடம் ஆபாசமாகப் பேசிய செல்போன் எண்கள். 8046016444, 8046016565, 8049175555, 8040474949, 80456 34300. இந்த நம்பரை போலீசார் இப்போது  துப்புதுலக்க தொடங்கி உள்ளனர். மேற்கண்ட 5 எண்களில் இருந்தும் ஒரே நபர் தான் தொடர்ந்து பேசி வருகிறார் என்பதை போலீசார் கண்டுபிடித்து விட்டனர்.  எனவே, அவரை கைது செய்ய சைபர் கிரைம் மூலம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »