Press "Enter" to skip to content

பாஜக ஆட்சியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து… நெருக்கடி ஏற்படுத்தும் சங்பரிவார்கள்.. மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை!

பாஜக ஆட்சியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “மத்திய பாஜக அரசு பதவியேற்றதில் இருந்தே இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. மத்திய அரசில் உள்ள அமைச்சர்களும், அந்த மத்திய அரசை அனைத்து வகைகளிலும் கட்டுப்படுத்தும் சங்பரிவாரங்களும், இடஒதுக்கீட்டுக்கு எதிராக, தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகள் பல்வேறு குழப்பங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் வித்திட்டுள்ளது.
ஆகவே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு கொள்கையில் எவ்வித குழப்பத்துக்கும் இடமளிக்காமல்- சமூக நீதிக்கு சிறிதும் பாதிப்பு ஏற்படாமல், பாதுகாத்திட மத்திய பாஜக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »