Press "Enter" to skip to content

ஆவின் டேங்கர் ஒப்பந்த பார வண்டிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது

ஆவின் டேங்கர் ஒப்பந்த லாரிகள் வேலைநிறுத்தம் நள்ளிரவு முதல் தொடங்கியது. ஒப்பந்த லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக பால் சப்ளை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

தமிழக அரசின் ‘ஆவின்’ பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் சப்ளை செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியார் டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டுடன் ஒப்பந்தம் முடிவடைந்தும், புதிய ஒப்பந்தம் போடவில்லை. சத்துணவு டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கிய கிறிஸ்டி நிறுவனத்துக்கு முழு ஒப்பந்ததையும் வழங்கப்போவதாக தகவல் வெளியானது.

இதனை கண்டித்து தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாக சங்கத்தின் தலைவர் சுப்பிரமணி நேற்றிரவு தெரிவித்தார்.

ஆவின் டேங்கர் ஒப்பந்த லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக பால் சப்ளை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆவின் நிர்வாக தரப்பில், ‘ஆவின் புதிய ஒப்பந்த நடவடிக்கைகளை கைவிடவில்லை. ஆவின் நிர்வாகத்துக்கு சொந்தமாக 53 டேங்கர் லாரிகள் இருக்கின்றன. அதனை வைத்து நிலைமையை சமாளிப்போம்’ என்று தெரிவிக்கின்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »