Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு பீகாரில் முதல் பலி – உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

பீகார் மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

மும்பை:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது. 

உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 7 ஆயிரத்து 725 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 54 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் இதுவரை 341 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், கத்தார் நாட்டில் இருந்து பீகார் திரும்பிய 38 வயது நிரம்பிய நபர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »