Press "Enter" to skip to content

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8 லட்சத்தை தாண்டியுள்ளது.

ஜெனீவா:

  

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் வேகமாக பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸ் தற்போது உலகின் 200 நாடுகளுக்கு பரவியுள்ளது.

முதலில் சீனாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த வைரஸ், அதன்பின் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி மற்றும் ஸ்பெயினில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது.

சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளையே ஆட்டம் காட்டி வரும் இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8 லட்சத்தை தாண்டியுள்ளது. 

உலக அளவில் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியுள்ளதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »