Press "Enter" to skip to content

எய்ம்ஸ் டாக்டரின் நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவரது 9 மாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு  உள்ளது. 

இதற்கிடையே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டரின் 9 மாத கர்ப்பிணி  மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டரின் மனைவி தற்போது எமர்ஜென்சியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தனிமைப்படுத்தப்பட்டு உள்ள அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »