Press "Enter" to skip to content

பிரான்சை புரட்டி எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாரிஸ்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ளது. 

தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

ஐரோப்பிய நாடான இத்தாலியில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா தற்போது பிரான்சில் நிலைகொண்டு வருகிறது.

பிரான்சில் 64 ஆயிரத்து 338 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு ஆயிரத்து 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »