Press "Enter" to skip to content

நாளை காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் மோடி- ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு

ஊரடங்கு உத்தரவு காலம் நிறைவடைய உள்ள நிலையில் பிரதமர் மோடி நாளை காலை நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்கள் தவிர, வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என உத்தரவிடப்பட்டு, இந்த உத்தரவு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன. 

மாநில முதலமைச்சர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வந்தார். 

இது ஒருபுறமிருக்க, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்தது. இதனால் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து பல்வேறு மாநில முதலமைச்சர்களும் மருத்துவ வல்லுநர்களும் கூறி வந்தனர். சில மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் நிவாரணம் குறித்தும் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9152 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »