Press "Enter" to skip to content

19 லட்சத்தை தாண்டிய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களின் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது.

ஜெனிவா:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியுள்ளது.  தற்போதைய நிலவரப்படி, 19 லட்சத்து 9 ஆயிரத்து 804 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 57 ஆயிரத்து 547 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »