இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக ஆயிரத்து 463 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
புதுடெல்லி:
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்தியாவில் வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு ழுமுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 463 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 29 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar