Press "Enter" to skip to content

ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை… அதிரும் உலக நாடுகள்… கொரோனா அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஜெனிவா:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 19 லட்சத்து 90 ஆயிரத்து 745 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. 

வைரஸ் பரவியவர்களில் 13 லட்சத்து 97 ஆயித்து 829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 4 லட்சத்து 66 ஆயிரத்து 997 பேர் சிகிச்ச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 919 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பின்வருமாறு:-

அமெரிக்கா – 25,839

ஸ்பெயின் – 18,056

இத்தாலி – 21,067

பிரான்ஸ் – 15,729

ஜெர்மனி – 3,294

இங்கிலாந்து – 12,107

சீனா – 3,341

ஈரான் – 4,683

துருக்கி – 1,403

பெல்ஜியம் – 4,175

நெதர்லாந்து – 2,945

சுவிஸ்சர்லாந்து – 1,174

பிரேசில் – 1,489

ஸ்வீடன் – 1,033

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »