Press "Enter" to skip to content

ஒரு லட்சத்து 33 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஜெனிவா:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 20 லட்சத்து 72 ஆயிரத்து 269 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 14 லட்சத்து 29 ஆயிரத்து 29 ஆயிரத்து 641 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 826 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனாவின் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 802 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:- 

அமெரிக்கா – 28,306

ஸ்பெயின் – 18,579

இத்தாலி – 21,645

பிரான்ஸ் – 17,167

ஜெர்மனி – 3,532

இங்கிலாந்து – 12,868

சீனா – 3,342

ஈரான் – 4,777

துருக்கி – 1,518

பெல்ஜியம் – 4,400

பிரேசில் – 1,736

கனடா – 1,006

நெதர்லாந்து – 3,134

ஸ்வீடன் – 1,203

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »