மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3202 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை:
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று 2916 ஆக இருந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 286 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 3,202 ஆக அதிகரித்துள்ளது.
இதில் கொரோனா தொற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar