Press "Enter" to skip to content

ஒரு லட்சத்து 44 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை 44 ஆயிரத்தை கடந்தது.

ஜெனிவா:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 44 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 21 லட்சத்து 45 ஆயிரத்து 512 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 14 லட்சத்து 56 ஆயிரத்து 314 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில்  57 ஆயிரத்து 58 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 5 லட்சத்து 45 ஆயிரத்து 137 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் விவரம் பின்வருமாறு:- 

அமெரிக்கா – 33,903

ஸ்பெயின் – 19,130

இத்தாலி – 22,170

பிரான்ஸ் – 17,920

ஜெர்மனி – 3,867

இங்கிலாந்து – 13,729

சீனா – 3,342

ஈரான் – 4,869

துருக்கி – 1,643

பெல்ஜியம் – 4,857

கனடா – 1,191

நெதர்லாந்து – 3,315

பிரேசில் – 1,769

சுவிஸ்சர்லாந்து – 1,281

ஸ்வீடன் – 1,333

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »