Press "Enter" to skip to content

7 லட்சம் பேருக்கு கொரோனா… ஒரே நாளில் 2 ஆயிரத்து 500 பேர் பலி – திகைத்து நிற்கும் அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது. மேலும், வைரசுக்கு நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500 பேர் பலியாகியுள்ளனர்.

நியூயார்க்:

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 22 லட்சத்து 48 ஆயிரத்து 864 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சத்து 23 ஆயிரத்து 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பரவியவர்களில் இதுவரை 5 லட்சத்து 71 ஆயிரத்து 523 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த கொடிய வைரசுக்க்கு இதுவரை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 145 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலக அளவில் வைரஸ் பரவியவர்கள், பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 7 லட்சத்து 9 ஆயிரத்து 735 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 32 ஆயிரத்து 165 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 535 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »