மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 4200 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில்தான் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இன்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த மாநிலத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4200-ஐ தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்தனர். இதுவரை 223 பேர் பலியாகியுள்ளனர். 507 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மக்கள் தொகை நெருக்கடியாக உள்ள மும்பை நகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எணிக்கை அதிகரித்து வருவால் சமூக தொற்றாக மாறிவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் நாளையில் இருந்து பாதிப்பு இல்லாத மாவட்டத்தில் கட்டுப்பாட்டுடன் ஊரடங்கு தளர்த்தப்படும் என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar