Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் – அரசு ஆதரவு குழுவினருக்கும் இடையே மோதல் – 14 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் அரசு ஆதரவு குழுவினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 14 பேர் உயிரிழந்தனர்.

காபுல்:

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். 

ராணுவத்திற்கு உதவியாகவும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவாகவும் சில குழுக்கள் தலிபான்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்திவருகின்றன. 

இதனால், இந்த குழுக்களுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் பால்ஹ் மாகாணம் சோல்ஹரா மாவட்டத்தில் உள்ள டல்லன் என்ற கிராமத்திற்குள் நேற்று நுழைந்த தலிபான் பயங்கரவாதிகள் அரசு படையினருக்கு ஆதரவாக செயல்பட்ட குழுவினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து அரசு ஆதரவு குழுவினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த மோதலில் அரசு ஆதரவு குழுவினர் 9 பேர், தலிபான் பயங்கரவாதிகள் 5 பேர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »