Press "Enter" to skip to content

தமிழகத்தில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா: பலி 17 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்தமாக 1520 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. கடந்த வாரத்தில் ஐந்து நாட்கள் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-க்கு கீழ் இருந்தது. இதற்கிடையில் நேற்று 105 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் 1477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1520ஆக உயர்ந்துள்ளது. இன்று இருவர் உயிரிழந்துள்ளதால் பலியானோரின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்முறையாக ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 457 பேர் குணமடைந்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »