தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,821 ஆக உயர்ந்துள்ள நிலையில் மாவட்டங்களின் நிலவரம் குறித்து காண்போம்…
சென்னை:
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே வருமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,821 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 935 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 495 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரங்கள் பின்வருமாறு:-
கோயம்புத்தூர் 141, திருப்பூர்- 110, திண்டுக்கல்-80, ஈரோடு- 70, திருநெல்வேலி-63, மதுரை-60, செங்கல்பட்டு-58, தஞ்சாவூர் – 55, நாமக்கல் -55, திருவள்ளூர்-52, திருச்சி-51, நாகப்பட்டினம்-44, தேனி-43, விழுப்புரம்- 43, கரூர்-42, ராணிப்பேட்டை -39, தென்காசி – 38, சேலம்-30, திருவாரூர்-29, தூத்துக்குடி-27, கடலூர்-26, விருதுநகர்-25, வேலூர்-22, காஞ்சிபுரம்-19, திருப்பத்தூர்-18, கன்னியாகுமரி-16, திருவண்ணாமலை-15, ராமநாதபுரம்-14, சிவகங்கை-12, நீலகிரி-9, பெரம்பலூர்-7, அரியலூர்-6, கள்ளக்குறிச்சி-5, புதுக்கோட்டை-1, தர்மபுரி-1.
Related Tags :
Source: Maalaimalar