Press "Enter" to skip to content

29 லட்சத்தை கடந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களின் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்தை கடந்தது.

ஜெனீவா:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 29 லட்சமாக அதிகரித்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, 29 லட்சத்து 8 ஆயிரத்து 206 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் பரவியவர்களில் 18 லட்சத்து 73 ஆயிரத்து 494 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 182 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது. 

வைரஸ் பரவியவர்களில் இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 501 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:-

அமெரிக்கா – 9,52,995

ஸ்பெயின் – 2,23,759

இத்தாலி – 1,95,351

பிரான்ஸ் – 1,61,488

ஜெர்மனி – 1,55,782

இங்கிலாந்து – 1,48,377

துருக்கி – 1,07,773

ஈரான் – 89,328

சீனா – 74,588

ரஷியா – 74,588

பிரேசில் – 57,961

பெல்ஜியம் – 45,325

கனடா – 45,016

நெதர்லாந்து – 37,190

சுவிஸ்சர்லாந்து – 28,894

பெரு – 25,331

இந்தியா – 24,942

போர்ச்சுகல் – 23,392

ஈக்வடார் – 22,719

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »