Press "Enter" to skip to content

30 லட்சம் பேருக்கு கொரோனா – அதிரும் நாடுகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்தது.

ஜெனீவா:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 30 லட்சமாக அதிகரித்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, 30 லட்சத்து 33 ஆயிரத்து 21 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் பரவியவர்களில் 19 லட்சத்து 9 ஆயிரத்து 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 56 ஆயிரத்து 457 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:-

அமெரிக்கா – 9,98,521

ஸ்பெயின் – 2,29,422

இத்தாலி – 1,99,414

பிரான்ஸ் – 1,62,100

ஜெர்மனி – 1,58,142

இங்கிலாந்து – 1,52,840

துருக்கி – 1,12,261

ஈரான் – 91,472

ரஷியா – 87,147

சீனா – 82,830

பிரேசில் – 63,328

கனடா – 47,346

பெல்ஜியம் – 46,687

நெதர்லாந்து – 38,245

இந்தியா – 27,892

பெரு – 27,517

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »