தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த வாய்ப்பில்லை என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது
சென்னை:
சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மருத்துவ குழுவினர் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த வாய்ப்பில்லை; படிப்படியாகத்தான் தளர்த்த முடியும். அதற்கான ஆலோசனை வழங்கியுள்ளோம்.
கொரோனா வைரஸ் உடனடியாக கட்டுக்குள் வராது. கொரோனா தொற்று நீண்ட நாட்களாக நம்முடன் இருக்கும் என்பதால் நமது வாழ்க்கை முறையே மாற்ற வேண்டும். பொது இடங்களில் அதிக கூட்டம் கூடுவதை அனுமதிக்கக் கூடாது. தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிவது கட்டாயம்.
புற்றுநோய், சிறுநீரகம் பாதிப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் முறையாக சிகிச்சையை கடைப்பிடிக்க வேண்டும். கடந்த வாரத்தில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு விகிதமும் அதிகரிப்பு.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Source: Maalaimalar