Press "Enter" to skip to content

33 லட்சத்தை நெருங்கிய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களின் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்தை நெருங்கியுள்ளது.

ஜெனீவா:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்தை நெருங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 32 லட்சத்து 98 ஆயிரத்து 631 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் பரவியவர்களில் 20 லட்சத்து 27 ஆயிரத்து 193 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 50 ஆயிரத்து 960 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:-

அமெரிக்கா – 10,91,067

ஸ்பெயின் – 2,39,639

இத்தாலி – 2,05,463

இங்கிலாந்து – 1,71,253

பிரான்ஸ் – 1,67,178

ஜெர்மனி – 1,62,530

துருக்கி – 1,20,204

ரஷியா – 1,06,498

ஈரான் – 94,640

பிரேசில் – 85,380

சீனா – 82,862

கனடா – 53,021

பெல்ஜியம் – 48,519

நெதர்லாந்து – 39,316

பெரு – 36,976

இந்தியா – 33,610

சுவிட்சர்லாந்து – 29,586

போர்ச்சீகல் – 25,045

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »