Press "Enter" to skip to content

2 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஜெனீவா:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

கொரோனாவை குணப்படுத்தும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த வைரசின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 33 லட்சத்து 70 ஆயிரத்து 953 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20 லட்சத்து 62 ஆயிரத்து 171 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவர்களில் 49 ஆயிரத்து 975 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், வைரஸ் பரவியவர்களில் 10 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 2 லட்சத்து 38 ஆயிரத்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 64,942

ஸ்பெயின் – 24,824

இத்தாலி – 28,236

இங்கிலாந்து – 27,510

பிரான்ஸ் – 24,594

ஜெர்மனி – 6,662

துருக்கி – 3,258

ரஷியா – 1,169

ஈரான் – 6,091

பிரேசில் – 6,017

சீனா – 4,633

கனடா – 3,387

பெல்ஜியம் – 7,703

பெரு – 1,124

நெதர்லாந்து – 4,893

இந்தியா – 

நெதர்லாந்து – 1,754

ஈக்வடார் – 1,063

பெல்ஜியம் – 1,007

ஸ்வீடன் – 2,653

அயர்லாந்து – 1,265

மெக்சிகோ – 1,859

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »