Press "Enter" to skip to content

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை கடந்தது- நாடு முழுவதும் 1218 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வைரஸ் அதிவேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 37336 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1218 ஆக உயர்ந்துள்ளது. 9951 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 11505 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 485 பலியாகி உள்ளனர். குஜராத்தில் 4721 பேருக்கும், டெல்லியில் 3738 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 2719 பேருக்கும், ராஜஸ்தானில் 2666 பேருக்கும், தமிழகத்தில் 2526 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »